COVID- 19 கிருமித்தொற்று அச்சத்தில் பள்ளி விடுமுறை காலத்தை நீட்டிக்கும் ஹாங்காங்
ஹாங்காங், அதன் பள்ளிகளுக்கான விடுமுறை காலத்தை மார்ச் மாதம் 16ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
ஹாங்காங், அதன் பள்ளிகளுக்கான விடுமுறை காலத்தை மார்ச் மாதம் 16ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
COVID- 19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று.
மார்ச் 2ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் மீண்டும் செயல்படுவது வழக்கம்.
ஆனால், பாலர்ப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் என அனைத்து கல்வி நிலையங்களுக்கான விடுமுறை காலத்தையும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஹாங்காங் அரசாங்கம் நீட்டிக்கிறது.
ஹாங்காங்கில் தற்போது 50 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.