Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: மேலும் 7 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று

ஹாங்காங்கில் புதிதாக ஏழு பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கில் புதிதாக ஏழு பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்துப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த இருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

மொத்தம், 34 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

குடியிருப்பாளர்கள் மேலும் ஐவரிடம் இலேசான அறிகுறிகள் தென்பட்டன.

என்றாலும், அவர்களுக்குக் கிருமி தொற்றவில்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

சமூகத்தில் பெரிய அளவில் கிருமிப் பரவல் ஏற்படும் சாத்தியம் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

சேதமடைந்த கழிவுநீர்க் குழாயின் மூலம், கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

குடியிருப்புக் கட்டடம் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டது.

அங்குள்ள வீடுகளின் கழிவறைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்