சோல் நகரிலிருந்து சீனா சென்றடைந்த 94 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
தென் கொரியாவின் சோல் (Seoul ) நகரிலிருந்து நான்ஜிங்கிற்குச் சென்ற விமானத்தில் இருந்த பயணிகள் 94 பேரைச் சீனா தனிமைப்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் சோல் (Seoul ) நகரிலிருந்து நான்ஜிங்கிற்குச் சென்ற விமானத்தில் இருந்த பயணிகள் 94 பேரைச் சீனா தனிமைப்படுத்தியுள்ளது.
அவர்களில் மூவருக்குக் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Asiana Airlines OZ349 விமானம் நேற்றுப் பிற்பகல் சீனாவில் தரையிறங்கியது.
காய்ச்சலால் அவதிப்பட்ட சீன சுற்றுப்பயணிகள் மூவரும், வூஹான் நகருக்கோ, மோசமாகப் பாதிக்கப்பட்ட ஹூபெய் மாநிலத்துக்கோ அண்மையில் செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது.