Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சொந்த வீட்டிற்குத் தீ மூட்டி, தப்பிக்க முயன்ற ஐவரைக் குத்திக்கொன்ற ஆடவர்

சொந்த வீட்டிற்குத் தீ மூட்டி, அதிலிருந்து தப்பிக்க முயன்ற 5 பேரைக் கத்தியால் குத்திக் கொன்ற தென்கொரிய ஆடவரைக் 

வாசிப்புநேரம் -
சொந்த வீட்டிற்குத் தீ மூட்டி, தப்பிக்க முயன்ற ஐவரைக் குத்திக்கொன்ற ஆடவர்

(படம்: Reuters)


சொந்த வீட்டிற்குத் தீ மூட்டி, அதிலிருந்து தப்பிக்க முயன்ற 5 பேரைக் கத்தியால் குத்திக் கொன்ற தென்கொரிய ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ஜின்ஜு நகரைச் சேர்ந்த அந்த 42 வயது ஆடவர் வீட்டிற்குத் தீ மூட்டியிருக்கிறார்.

தீயிலிருந்து தப்பிக்க முயன்ற குடியிருப்பாளர்கள் படிக்கட்டில் இறங்கும்போது, அவர் தாக்கியியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட ஐவரில், 12 வயதுச் சிறுமியும் ஒருவர்.

சம்பவத்தில் 13 பேர் காயமடைந்தனர்.

சம்பளம் வழங்கப்படாத ஆத்திரத்தில் ஆடவர் அத்தகைய செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்