Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கொரியக் கப்பல் விபத்து: எலும்புக்குரியவர் அடையாளம் காணப்பட்டார்

தென் கொரியாவின் செவோல் பயணிகள் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு விபத்தில் மாண்டவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தென்கொரியக் கப்பல் விபத்து: எலும்புக்குரியவர் அடையாளம் காணப்பட்டார்

(படம்: AP)

தென் கொரியாவின் செவோல் பயணிகள் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு விபத்தில் மாண்டவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சென்ற மார்ச் மாதம் அந்தக் கப்பல் கடலிலிருந்து மீட்கப்பட்ட பிறகு முதன் முறையாக அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட எலும்பு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கோ சாங் சியோக் உடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செவோல் கப்பலில் பள்ளிச் சுற்றுலா சென்றவர்களில் அவரும் ஒருவர்.

இந்த மாதம் நான்கு வெவ்வேறு பொழுதுகளில் மீட்கப்பட்ட எலும்புகளை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் செவோல் கப்பல் கடலில் மூழ்கியது. அதில் 300 க்கும் அதிமானோர் பலியாயினர்.

அவர்களில் ஒன்பது பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்