Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலாக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் தொடர்பில் சிங்கப்பூர் ஆடவர் கைது

மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் நடந்த கொடூரமான கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
மலாக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் தொடர்பில் சிங்கப்பூர் ஆடவர் கைது

கோப்புப் படம்: TODAY

மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் நடந்த கொடூரமான கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர்க் காவல்படையின் உதவியுடன் அந்த ஆடவர் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டார்.

கம்போங் லடாங் பகுதியில் புல்வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் மனித உடற்பாகங்களைக் கண்டுபிடித்ததாக மலாக்கா காவல்துறை கூறியது.

அதனையடுத்து ஊழியர் காவல்துறையிடம் புகாரளித்தார்.

27 வயதுப் பெண் மற்றும் 11 வயது சிறுவனின் உடற்பாகங்கள் அவை.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பெண்ணின் வீட்டில் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்