ஷங்ஹாய்: அனைத்துலக விமான நிலையத்தின் 17,700க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் சோதனை
சீனாவின் ஷங்ஹாய் நகரில் உள்ள ஆகப்பெரிய அனைத்துலக விமான நிலையத்தின் ஊழியர்கள் COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஷங்ஹாய் நகரில் உள்ள ஆகப்பெரிய அனைத்துலக விமான நிலையத்தின் ஊழியர்கள் COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நகரில் ஏற்பட்ட நோய்ப்பரவல் விமான நிலையத்தில் சரக்கு விநியோகம் செய்வோருடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது.
இம்மாதம், ஷங்ஹாயில் உள்ளூர் அளவில் 6 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின - அனைத்தும் விமான நிலையத்துடன் தொடர்புடையவை.
17,700க்கும் மேற்பட்டோர் இன்று காலை சோதிக்கப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. 11,500 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.