Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஷங்ஹாய் கட்டட விபத்து : பலி எண்ணிக்கை 10க்கு அதிகரிப்பு

ஷங்ஹாயில் வர்த்தகக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 10க்கு உயர்ந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
ஷங்ஹாய் கட்டட விபத்து : பலி எண்ணிக்கை 10க்கு அதிகரிப்பு

(படம்: AFP/Hector Retamal)

ஷங்ஹாயில் வர்த்தகக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 10க்கு உயர்ந்துள்ளது.

புதுப்பிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது.

கட்டுமானத் தொழிலாளர்கள் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் ஊழியர்கள் 25 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்களில் 10 பேர் கடுமையான காயத்தால் மாண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இடிபாடுகளுக்குள் இன்னும் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், தேடல் மீட்புப் பணிகள் முடிந்து விட்டதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்