ஹாங்காங்கில் கலவரங்களைத் தொடர்ந்து, அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன
ஹாங்காங்கில் வன்முறைமிக்க கலவரங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, வர்த்தக வட்டாரத்தில் உள்ள அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஹாங்காங்கில் வன்முறைமிக்க கலவரங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, வர்த்தக வட்டாரத்தில் உள்ள அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சீனாவுக்கு வழக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படுவதை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து, அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சாலைகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைக்க கண்ணீர் புகை, ரப்பர் தோட்டாக்கள், மிளகு புகை போன்றவற்றைக் காவல்துறை பயன்படுத்தியது.
ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 72 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக ஹாங்காங் மருத்துவமனை ஆணையம் தெரிவித்தது.