தென் கொரியா: ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று
தென் கொரியாவில் மேலும் 313 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் மேலும் 313 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு அதுவே ஆக அதிக எண்ணிக்கை.
தென் கொரியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக 200ஐத் தாண்டியுள்ளது.
அதைத் தொடர்ந்து சோல் (Seoul)வட்டாரத்தில் அரசாங்கம் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி இருக்கிறது.
அன்றாடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்படுவோரில் சுமார் முக்கால்வாசிப் பேர் சோலைச் சேர்ந்தவர்கள்.
அலுவலகங்கள், மருத்துவ வசதிகள், சிறிய ஒன்றுகூடல் நடந்த இடங்கள் ஆகியன கிருமித்தொற்றுக் குழுமங்களாக அடையாளம் காணப்படுகின்றன.