தென்கொரியா: நாளுக்கு நாள் மோசமாகி வரும் கிருமிப்பரவல் சூழல்
தென்கொரியாவில் கிருமிப்பரவல் நிலவரம் மேலும் மோசமடைந்துள்ளது.
தென்கொரியாவில் கிருமிப்பரவல் நிலவரம் மேலும் மோசமடைந்துள்ளது.
அங்கு, புதிதாக 380க்கும் அதிகமானோருக்கு இன்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கிருமிப் பரவல் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தென்கொரிய அதிகாரிகள் கூறினர்.
நாட்டில் மூன்றாம் கட்டக் கிருமிப் பரவல் தொடங்கியிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
நிலைமை விரைவில் மேம்படாவிட்டால், தலைநகர் சோலிலும், அதனைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் விழிப்புநிலை மேலும் உயர்த்தப்படக்கூடும்.