வகுப்புக்குச் செல்லாமல் இருக்க இதையெல்லாம் செய்யலாமா?
மலேசியா: வகுப்புக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக 11 வயதுச் சிறுமி தாம் கடத்தலுக்கு ஆளானதாகக் கூறியிருக்கிறார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
மலேசியா: வகுப்புக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக 11 வயதுச் சிறுமி தாம் கடத்தலுக்கு ஆளானதாகக் கூறியிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 7), சிறுமி பள்ளிக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தபோது 2 வாகனங்களில் வந்த 8 பேர் தம்மைக் கடத்த வந்ததாகத் தாயாரிடம் பொய் சொல்லியிருக்கிறார்.
பயந்துபோன தாயார், மகள் சொன்னதை நம்பி கிள்ளானில் உள்ள காவல்துறை நிலையத்தில் புகார் செய்தார்.
காவல்துறையினர் பின்னர், சிறுமி சொன்னது பொய் என்று கண்டறிந்ததாய் New Straits Times நாளிதழ் கூறியது.
சிறுமியும் தாம் சொன்னது பொய் என்று ஒப்புக்கொண்டார்.