இலங்கையில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம்: அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இலங்கையில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 290 பேர் மாண்டனர்.
500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இனி வரும் நாள்களில் பயங்கரவாதிகள் சிறிய எச்சரிக்கையுடன் அல்லது அறவே எச்சரிக்கை விடுக்காமல் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து நடுவங்கள், கடைத்தொகுதிகள், ஹோட்டல்கள், வழிபாட்டு இடங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடக்கலாம் என்று அது எச்சரித்துள்ளது.