இந்தியா: சமூக ஊடகக் கண்காணிப்பு நடவடிக்கை கவலைக்குரியது- உச்சநீதிமன்றம்
புதுடில்லி: சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் அராசங்கத்தின் திட்டம் இந்தியாவைக் 'கண்காணிப்புமிக்க நாடாக' மாற்றக்கூடும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
புதுடில்லி: சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் அராசங்கத்தின் திட்டம் இந்தியாவைக் 'கண்காணிப்புமிக்க நாடாக' மாற்றக்கூடும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அது குறித்து அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரைக் கண்காணிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. அதேநேரத்தில் பொய்த் தகவல்கள் கண்டறியப்பட்ட வேண்டும் என்கிறது.
நீதிமன்றத்தின் அக்கறைகுறித்து தகவல், ஒளிபரப்பு அமைச்சு உடனடியாகக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளது.