தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் - சீனா சினம்
தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய வட்டாரத்தில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இரண்டு பயணம் செய்தது குறித்துச் சீனா சினம் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய வட்டாரத்தில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இரண்டு பயணம் செய்தது குறித்துச் சீனா சினம் தெரிவித்துள்ளது.
அந்த வட்டாரத்தைப் பெய்ச்சிங் உரிமை கோரி வருகிறது.
சீனாவின் அனுமதியின்றி, அமெரிக்கப் போர்க் கப்பல்கள் அங்கு நுழைந்ததாகச் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
சினத்தைத் தூண்டும் அத்தகைய நடவடிக்கைகளை வாஷிங்டன் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பெய்ச்சிங் வலியுறுத்தியுள்ளது.
இந்த வாரம் புதிய சுற்று வர்த்தகப் பேச்சைத் தொடங்க, இரு நாட்டு அதிகாரிகளும் பெய்ச்சிங்கில் தயாராகிவரும் வேளையில், சீனாவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.