தென் கொரியாவில் உச்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை நிலை
தென் கொரியாவின் பெரும்பாலான பகுதிகளில், நிலச்சரிவுக்கான எச்சரிக்கை நிலை உச்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் பெரும்பாலான பகுதிகளில், நிலச்சரிவுக்கான எச்சரிக்கை நிலை உச்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய, தெற்குப் பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதே அதற்குக் காரணம்.
ஒரு வாரமாகப் பெய்யும் மழையால் 520க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மழை காரணமாக 21 பேர் மாண்டனர்.
3,000த்துக்கும் அதிகமானோர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.