தென்கொரியாவில் 3 மாதங்களில் இல்லாத வகையில் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள்
தென்கொரியாவில், கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில், புதிதாக 668 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தென்கொரியாவில், கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில், புதிதாக 668 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாலர்பள்ளிகள், வெப்பக் குளியல் நிலையங்கள், மதுபானக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவற்றில் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று கண்டறியப்பட்டது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர், சோலிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
தென் கொரியாவில் நான்காவது முறையாக நோய்ப்பரவல் தலைதூக்கினால், நாட்டின் தடுப்பூசித் திட்டம் பாதிக்கப்படும் என்று பிரதமர் சுங் சியெ-கியுன் (Chung Sye-kyun) எச்சரித்துள்ளார்.