தென் சீனாவில் கடும் மழையால் 19 பேர் மாண்டனர்.
பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குவாங்ஸி (Guangxi), குவாங்டோங் (Guangdong) வட்டாரங்களில் வாரம் முழுதும் பெய்த மழை வீடுகள், சாலைகள், பயிர்களைச் சேதப்படுத்தியது.
570,000 மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை வெளியேற்றுவதற்கும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்பதற்கும் அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
நாளையும் கடுமையான மழை இருக்கும் என முன்னுரைக்கப்படுகிறது.