இலங்கையிலுள்ள 3 தேவாலயங்களிலும் 3 ஹோட்டல்களிலும் வெடிப்புகள் - குறைந்தது 52 பேர் மரணம்
இலங்கையிலுள்ள 3 தேவாலயங்களிலும் 3 ஹோட்டல்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இலங்கையிலுள்ள 3 தேவாலயங்களிலும் 3 ஹோட்டல்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வெடிப்புகளில் இதுவரை 52 பேர் மாண்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் கொழும்பிலுள்ள சில சொகுசு ஹோட்டல்களிலும் தேவாலயம் ஒன்றிலும் இன்று வெடிப்புகள் நேர்ந்தன.
தலைநகருக்கு வெளியிலுள்ள மேலும் இரண்டு தேவாலயங்களிலும் வெடிப்புகள் நேர்ந்தன.
வெடிப்புக்குக் காரணம் என்னவென்று தற்போது தெரியவில்லை.
கொழும்புக்கு வடக்கே, நெகம்போ நகரின் கட்டுவபிட்டியா பகுதியிலுள்ள
St Sebastian's தேவாலயத்தின் Facebook பக்கத்தில் உதவி கோரி பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது.