இலங்கை குண்டு வெடிப்பு: 24 பேர் கைது
இலங்கையில் 200க்கும் அதிகமானோரைப் பலிவாங்கிய குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் குறைந்தது 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இலங்கையில் 200க்கும் அதிகமானோரைப் பலிவாங்கிய குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் குறைந்தது 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பு ஏதும் உள்ளதா என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் நடந்த 8 குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இலங்கை நேரப்படி, மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருக்கிறது.
முக்கியச் சமூக ஊடகங்களையும், குறுஞ்செய்திச் சேவைகளையும் இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. சம்பவங்களின் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.