ஸ்ரீநகரில் கடும் பனியால் விமானச் சேவைகள் ரத்து - சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட சுற்றுப்பயணிகளுக்குச் சிரமம்
இந்தியா: ஸ்ரீநகரில் தொடரும் பனி காரணமாக 25 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா: ஸ்ரீநகரில் தொடரும் பனி காரணமாக 25 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் வீடுதிரும்ப முடியாமல் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர்.
ரத்துச் செய்யப்பட்ட விமானச் சேவைகள்குறித்து ஸ்ரீநகர் விமான நிலையம் அதன் Twitter பக்கத்தில் அறிவித்து வருகிறது.
மோசமான வானிலை வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.