Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஸ்ரீவிஜயா விமான விபத்து - ஜக்கர்த்தா துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மேலும் சில சிதைவுகள்

இந்தோனேசியாவில் விழுந்து நொறுங்கிய ஸ்ரீவிஜயா (Sriwijaya) விமானத்தின் சிதைவுகளில் சில, தலைநகர் ஜக்கர்த்தாவின் துறைமுகக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் விழுந்து நொறுங்கிய ஸ்ரீவிஜயா (Sriwijaya) விமானத்தின் சிதைவுகளில் சில, தலைநகர் ஜக்கர்த்தாவின் துறைமுகக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் தகவல், குரல் பதிவுப் பெட்டிகளில் ஒன்று, சில நாட்களுக்கு முன் மீட்கப்பட்டது.

மேலும் ஒரு தகவல், குரல் பதிவுப் பெட்டியைக் கண்டுபிடிக்க, மீட்புப் பணியாளர்கள், தீவிரமாக முயன்று வருகின்றனர்.

சுமார் 4,000 பணியாளர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 100 விமானங்கள், கப்பல்கள், படகுகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

62 பயணிகள் இருந்த அந்த விமானம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 9) ஜக்கர்த்தாவில் (Jakarta) இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கடலில் விழுந்து நொறுங்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்