Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் வூஹான் நகரில் இசை நிகழ்ச்சி... முதல் நாளில் முகக் கவசம் அணியாமல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மத்தியச் சீனாவின் வூஹான் நகரில், Strawberry இசை நிகழ்ச்சியின் முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

வாசிப்புநேரம் -

மத்தியச் சீனாவின் வூஹான் நகரில், Strawberry இசை நிகழ்ச்சியின் முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அவர்களில் பலர் முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சியை ரசித்தனர்.

வெளிப்புறத்தில் இடம்பெறும் அந்த இரண்டு நாள் இசை நிகழ்ச்சி கிருமிப்பரவல் காரணமாக சென்ற ஆண்டு தாமதமானது, பிறகு ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்ததாக
ஏற்பாட்டாளார்கள் கூறினர்.

5-நாள் தேசிய விடுமுறையை ஒட்டி, சீனாவின் மற்ற நகரங்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கொரோனா கிருமிப்பரவல் தொடங்கியபோது வூஹான் நகரில், உலகின் ஆகக் கடுமையான முடக்கம் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அங்கு வசிப்பவர்கள், சுமார் 2 மாதங்களுக்கும் மேலாகக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடந்தனர்.

தற்போது, வூஹான் நகர் கிட்டத்தட்ட கிருமிப்பரவல் இல்லாத இடமாக மாறியுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்