சுவிட்சர்லந்தில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர்
ஐரோப்பிய நாடுகளில் COVID-19 கிருமி பரவும் வேளையில், சுவிட்சர்லந்தில் முதல் COVID-19 கிருமித்தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் COVID-19 கிருமி பரவும் வேளையில், சுவிட்சர்லந்தில் முதல் COVID-19 கிருமித்தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இத்தாலியின் எல்லைக்கு அருகே உள்ள டிச்சினோ பகுதியில், COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டார்.
இத்தாலியில் கிருமி வெகுவாகப் பரவுவதால், சுவிட்சர்லந்து அதிக விழிப்பு நிலையில் உள்ளது.
இதுவரை, கிருமித்தொற்று அறிகுறிகள் இருந்த 300 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும், COVID-19 கிருமி தொற்றவில்லை என்று உறுதிசெய்யப்பட்டது.
மேலும் அதிகமனோரைச் சோதிக்கவிருப்பதாகவும்,
அதன் எல்லைப்பகுதிகளில் விழிப்பு நிலையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் சுவிட்சர்லந்து தெரிவித்துள்ளது.