COVID-19: தைவானில் தொடர்ந்து 56 நாள்களாகப் புதிய கிருமித்தொற்றுச் சம்பவம் இல்லை
தைவானில், தொடர்ந்து 56 நாள்களாகப் புதிய கிருமித்தொற்றுச் சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.
தைவானில், தொடர்ந்து 56 நாள்களாகப் புதிய கிருமித்தொற்றுச் சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.
இன்றும் அதேநிலை தொடர்ந்தால், கட்டுப்பாடுகளை முற்றிலுமாய்த் தளர்த்தத் திட்டமிடுவதாக அரசாங்கம் தெரிவித்தது.
வீடுகளிலும், உணவகங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்ற பொது இடங்களிலும் மக்கள் ஒன்றுகூடுவதில், இனி எண்ணிக்கை வரம்பு இருக்காது.
எனினும், தொடர்புத் தடங்களைக் கண்டறிய வசதியாக, நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்கள் பற்றிய விவரங்களை மக்கள் தெரிவிப்பது கட்டாயம்.
கூட்ட நெரிசலான இடங்களில், பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சூழலில், பொதுமக்கள் முகக் கவசங்களை அணியவேண்டும்.
இதுவரை தைவானில், கிருமித்தொற்றால் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் மாண்டனர்.