சீன மாநிலத்தில் தொடரும் கனத்த மழை - ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
சீனாவின் மத்திய பகுதியில் தொடரும் கனத்த மழையாலும் வெள்ளத்தாலும் குறைந்தது 33 பேர் மாண்டனர்.
சீனாவின் மத்திய பகுதியில் தொடரும் கனத்த மழையாலும் வெள்ளத்தாலும் குறைந்தது 33 பேர் மாண்டனர்.
ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.
ஷெங்ஸோ (Zhengzhou) நகரில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனத்த மழை அடுத்த சில நாள்களுக்குத் தொடரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தைவானுக்குக் கிழக்கே வலுவடைந்துவரும் சூறாவளியும் அதற்கு ஒரு காரணம்.
சீனாவில் இதுவரை அந்தப் பேரிடரால் சுமார் 190 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வட்டாரம், ஏன் இதுபோன்ற கடுமையான வானிலையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.