தாய்லந்துக் குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அடுத்த வாரம் வீடு திரும்பலாம்
தாய்லந்துக் குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனையில் இருந்து அடுத்த வாரம் வீடு திரும்பலாம் என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தாய்லந்துக் குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனையில் இருந்து அடுத்த வாரம் வீடு திரும்பலாம் என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஜூலை 19 ஆம் தேதி அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 சிறுவர்களும், அவர்களின் பயிற்றுவிப்பாளரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குனமடைந்துவருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, குகையில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.