தாய்லந்துக் குகையிலிருந்து தப்பிக்க 13 பேரும் நாள்தோறும் குழி தோண்டினார்கள்
தாய்லந்தின் தாம் லுவாங் குகையில் சிக்கியிருந்த 13 பேரும், பிரிட்டிஷ் முக்குளிப்பாளர்களால் தாங்கள் கண்டுபிடிப்பதற்கு முன், குகையிலிருந்து தப்பிப்பதற்கு நாள்தோறும் குழி தோண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லந்தின் தாம் லுவாங் குகையில் சிக்கியிருந்த 13 பேரும், பிரிட்டிஷ் முக்குளிப்பாளர்களால் தாங்கள் கண்டுபிடிப்பதற்கு முன், குகையிலிருந்து தப்பிப்பதற்கு நாள்தோறும் குழி தோண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்களைக் கொண்டு அவர்கள் குழி தோண்டியதாக மீட்புப் பணி முழுவதும் அவர்களுடன் இருந்த இரணுவ மருத்துவ உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
5 மீட்டர் ஆழத்திற்கு அவர்கள் குழியைத் தோண்டியதாக திரு. பாக் லோஹார்ன்ஷூன் தமது Facebook பக்கத்தில் குறிப்பிட்டார்.
உணவில்லாத போதிலும், அந்த 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் மனவுறுதியுடன் இருந்ததை அவர் மெச்சினார்.