குழந்தைகளைக் கடத்தியவருக்கு 374 ஆண்டுச் சிறை
தாய்லந்தில் குழந்தைகளைக் கடத்திய ஆடவருக்கு 374 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
தாய்லந்தில் குழந்தைகளைக் கடத்திய ஆடவருக்கு 374 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய குற்றத்தை வேறு எவரும் செய்யக்கூடாது என்பதற்காகக் கடும் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
யுட்டானா கொட்சாப் (Yuttana Kodsap) எனும் அந்த 31 வயது ஆடவர் ஆபாசக் காணொளிகளைத் தயாரிக்க ஏழு வயதிலிருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஆடவருக்கு சிறைத்தண்டனையுடன் 36,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்துத் தாய்லந்து எடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது.