Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கேளிக்கை விளையாட்டில் அசம்பாவிதம் - ஐவர் உயிர் தப்பினர்

தாய்லந்தில் கேளிக்கை விளையாட்டில் பங்கேற்ற ஐந்து பேர் நல்லவேளையாக உயிர்தப்பினர்.  

வாசிப்புநேரம் -
கேளிக்கை விளையாட்டில் அசம்பாவிதம் - ஐவர் உயிர் தப்பினர்

(படம்: Pixabay)

தாய்லந்தில் கேளிக்கை விளையாட்டில் பங்கேற்ற ஐந்து பேர் நல்லவேளையாக உயிர்தப்பினர்.

லொப்புரி வட்டாரத்தில் நடந்த அந்தக் கேளிக்கை நிகழ்ச்சியின் 'Pirates of Caribbean' விளையாட்டில் விபத்து நேர்ந்ததாக NDTV தெரிவித்தது.

விளையாட்டில் ஆர்வத்துடன் மக்கள் ஏறுவதும் அது தொடங்கிய சிறிது நேரத்தில் ஐந்து பேர் கீழேயுள்ள தளத்தில் விழுவதையும் காட்டும் காணொளி இணையத்தில் பரவிவருகிறது.

பாதுகாப்புப் பட்டை ஒழுங்காகப் பொருத்தப்படாததால் விபத்து நேர்ந்ததாக DailyMail கூறியுள்ளது.

யாருக்கும் பெரிய காயங்கள் இல்லை.

ஒரு சிறுவன் தடுப்பைத் தாண்டி தரையில் விழுந்தான்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்