தாய் ரக்சா சார்ட் கட்சி கலைக்கப்பட வேண்டும்: தாய்லந்துத் தேர்தல் ஆணையம்
தாய்லந்துத் தேர்தல் ஆணையம், தாய் ரக்சா சார்ட் கட்சியைக் கலைப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்ளவிருக்கிறது.
தாய்லந்துத் தேர்தல் ஆணையம், தாய் ரக்சா சார்ட் கட்சியைக் கலைப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்ளவிருக்கிறது.
இளவரசி உபோன்ராத்தைப் பிரதமர் பதவிக்குப் போட்டியிட நியமனம் செய்ததன் வாயிலாக, அக்கட்சி, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஆணையம் இன்று (பிப்பரவரி 13) சுட்டிக்காட்டியது.
கடந்த வாரம் தாய் ரக்சா சார்ட் கட்சி செய்த அந்த நியமனம், அரசமைப்புச் சட்ட ரீதியான மன்னராட்சியை அவமதிப்பதற்குச் சமம் எனத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
தாய்லந்துத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 24ஆம் தேதி இடம்பெறவிருக்கிறது.