Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பேங்காக்கில் தொடரும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம்

பேங்காக்கில் தொடரும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் 

வாசிப்புநேரம் -

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ந்து 4ஆவது நாளாகப் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகமானோர் கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தண்ணீரைப் பீய்ச்சியடுத்தும், வல்லந்தமாகவும் கூட்டத்தினரை அவர்கள் கலைத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இம்முறை மாறுபட்ட உத்திகளைக் கையாள்கின்றனர். அமைதியான முறையிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவும் அவர்கள் கலைந்துசென்றனர்.

கல்வி நிலையங்கள் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் அவர்கள் பேரணி நடத்தினர்.

அரசாங்கத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதில் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது.

பிரதமர் பிராயுத் சான் ஓ சாவின் (Prayut Chan-o-cha), வரும் நாள்களில் ஆர்ப்பாட்டங்களைத் தடுத்துநிறுத்த ராணுவத்தினரைப் பணியில் ஈடுபடுத்தும் சாத்தியமும் உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்