Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: துப்பாக்கிச் சூட்டில் இரண்டு புத்த பிக்குகள் மரணம்

தாய்லந்தின் நராத்திவாட் (Narathiwat) மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு புத்த பிக்குகள் மாண்டனர்.  

வாசிப்புநேரம் -

தாய்லந்தின் நராத்திவாட் (Narathiwat) மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு புத்த பிக்குகள் மாண்டனர்.

காயமுற்ற மேலும் இருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரட்டானுப்பாப் (Rattanupap) எனும் பௌத்த ஆலயத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறினர்.

தென் தாய்லந்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிவினைவாதக் கிளர்ச்சி தொடர்பான வன்முறை தொடர்ந்து வருகிறது.

அதில் இதுவரை 6,900க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர். 13,000க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்