தாய்லந்தில் Amphan சூறாவளி - அதிகாரிகள் எச்சரிக்கை
தாய்லந்தில் Amphan சூறாவளி - அதிகாரிகள் எச்சரிக்கை
வங்காள விரிகுடாவைச் சூழ்ந்துள்ள Amphan சூறாவளியால், தாய்லந்தில் கனத்த மழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அங்குத் திடீர் வெள்ளமும் அலைப்பெருக்கும் ஏற்படக்கூடுமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தலைநகர் பாங்காக்கிற்கும் 62 மாநிலங்களுக்கும் புயலுக்கான எச்சரிக்கைகளைப் பேரிடர் தடுப்புத்துறை விடுத்துள்ளது.
அந்தப் பகுதிகளில் நாளைவரை கனத்த மழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.