தாய்லந்தில் 2ஆம் நாளாக கிருமித்தொற்றால் அதிகமானோர் மரணம்
தாய்லந்தில் ஒரே நாளில் புதிதாக 1,940 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தாய்லந்தில் ஒரே நாளில் புதிதாக 1,940 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இரண்டாம் நாளாக, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேர் மாண்டனர்.
முன்னர், முடக்கம், எல்லைக் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் மூலம் தாய்லந்து கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தியது.
இருப்பினும், சென்ற மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்த 3ஆம் கட்டக் கிருமிப்பரவலால் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
3ஆம் கட்டக் கிருமிப்பரவலில் புதுரக B.1.1.7 கிருமித்தொற்றும் அடையாளம் காணப்பட்டது.
தாய்லந்தில் இதுவரை 68,984 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது; அவர்களில் 245 பேர் மாண்டனர்.