Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் உள்ளூர் அளவில் மேலும் மூவருக்குக் கிருமித்தொற்று

தாய்லந்தில் இன்று மூவருக்கு உள்ளூரிலேயே கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் உள்ளூர் அளவில் மேலும் மூவருக்குக் கிருமித்தொற்று

(படம்: Reuters/Soe Zeya Tun)

தாய்லந்தில் இன்று மூவருக்கு உள்ளூரிலேயே கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11ஆம் தேதிக்குப் பிறகு நேற்று ஒருவருக்கு உள்ளூரில் கிருமி தொற்றியது உறுதியானது.

புதிதாகப் பாதிக்கப்பட்ட மூவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மியன்மார் குடிமக்களின் குடும்ப உறுப்பினர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வார முற்பகுதியில், மியன்மார் எல்லையில் உள்ள தாய்லந்தின் வடக்குப் பகுதியில் வசிக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

தாய்லந்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3686. 59 பேர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்