COVID நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் போதுமான மருத்துவமனைப் படுக்கைகள் உள்ளன: தாய்லந்து
தாய்லந்து சுகாதாரத் துறை அதிகாரிகள், அதிகரித்துவரும் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் போதுமான மருத்துவமனைப் படுக்கைகள் இருப்பதாக உறுதி கூறியுள்ளனர்.
தாய்லந்து சுகாதாரத் துறை அதிகாரிகள், அதிகரித்துவரும் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் போதுமான மருத்துவமனைப் படுக்கைகள் இருப்பதாக உறுதி கூறியுள்ளனர்.
நாடெங்கும் அத்தகைய படுக்கைகள், ஒன்பதாயிரத்துக்கும் மேல் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஒப்புநோக்கச் சென்றவாரம், சுமார் 7000 படுக்கைகளே இருந்தன.
அறிகுறிகள் ஏதுமின்றி COVID-19 உறுதியானாலும்கூட, அவர்களை மருத்துவமனையில் சேர்த்துப் பராமரிக்கும் நடைமுறையை, தாய்லந்து பின்பற்றிவருகிறது.
அதனால், கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், மருத்துவமனைப் படுக்கை குறித்துக் கவலை எழுந்தது.
கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 400க்கும் அதிகமானவர்களிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
- Reuters