Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மூடநம்பிக்கையால் கைதான மூதாட்டி

சீனாவில் முதிய பயணி ஒருவர் விமான இயந்திரத்தில் நாணயத்தை வீசியதால் அந்த விமானச் சேவை ரத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மூடநம்பிக்கையால் கைதான மூதாட்டி

படம்: Wiki Commons

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனாவில் முதிய பயணி ஒருவர் விமான இயந்திரத்தில் நாணயத்தை வீசியதால் அந்த விமானச் சேவை ரத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் நாணயத்தை வீசியதாக அந்த மூதாட்டி கூறினார்.

மங்கோலியாவின் Hohhot Baita அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று அந்தச் சம்பவம் நடந்தது.

66 வயது மூதாட்டி பின்னர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டதாக, Tianjin Airlines நிறுவனம் தெரிவித்தது.

காவல்துறை விசாரணையில், கடவுளை வேண்டிக்கொண்டு  6 நாணயங்களை வீசியதை மூதாட்டி ஒப்புக்கொண்டார்.

2 மணி நேரங்கழித்து மற்ற பயணிகளுடன் அந்த விமானம் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்