சீனா: சன்னல் வழி 1 வயதுக் குழந்தையைத் தூக்கியெறிந்த சந்தேகத்தில் தந்தை கைது
சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் சன்னல் வழி தனது 1 வயது குழந்தையைத் தூக்கியெறிந்த சந்தேகத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் சன்னல் வழி தனது 1 வயது குழந்தையைத் தூக்கியெறிந்த சந்தேகத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
6-ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை விழுந்த இடத்திலேயே மாண்டது.
சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுவாக்கில் நடந்தது.
கைது செய்யப்பட்ட 29வயது ஆடவர் பணம் தொடர்பான வாக்குவாதத்தைத் தொடர்ந்து குழந்தையைத் தூக்கியெறிந்ததாக நம்பப்படுகிறது.
மாண்ட குழந்தையுடன் பெண் ஒருவர் அழும் காணொளி சீன சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
சம்பவம் பற்றிய விசாரணை தொடர்கிறது.