இந்தோனேசியா: சுமத்ரா புலி தாக்கி விவசாயி மரணம்
இந்தோனேசியாவின் பகரலம் (Pagaralam) பகுதியில் சுமத்ரா புலி தாக்கி விவசாயி மாண்டார்.
இந்தோனேசியாவின் பகரலம் (Pagaralam) பகுதியில் சுமத்ரா புலி தாக்கி விவசாயி மாண்டார்.
மாண்ட ஆடவர் காப்பித் தோட்டத்தில் வேலை செய்தவர்.
அவர் வீட்டிற்கு வரத் தவறியதால் அவரைத் தேடி உறவினர்கள் காட்டிற்குள் சென்றுள்ளனர்.
அப்போது அவர் மாண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆடவருக்கு அருகே புலியின் கால்தடங்கள் தென்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இம்மாதம் அந்த வட்டாரத்தில் சுமத்ரா புலி தாக்கி இரண்டு பேர் மாண்டதாகவும், ஒரு சுற்றுப்பயணி காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
புலியின் தாக்குதலைத் தொடர்ந்து பொதுமக்கள் உள்ளூர்க் காட்டுப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுமத்ரா புலி அருகி வரும் விலங்கினங்களில் ஒன்று.