இந்திய வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ளவில்லை: மறுக்கும் TikTok
TikTok நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்களைச் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
TikTok நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்களைச் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லை என TikTok குறிப்பிட்டது.
இந்திய அரசாங்கத்தின் அனைத்துத் தகவல் தனியுரிமை, பாதுகாப்புச் சட்டங்களைப் பின்பற்றி வருவதாக TikTok முதன்மை அதிகாரி நிக்கில் காந்தி (Nikhil Gandhi) தெரிவித்தார்.
புதுடில்லி, மற்ற 59 சீனச் செயலிகளோடு ByteDance நிறுவனத்தின் TikTok செயலியையும் தடை செய்தது. இந்தியாவில் சுமார் 120 மில்லியன் TikTok வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு, அந்தச் செயலிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்று கூறுகிறது.
ஜூன் 15ஆம் தேதி 20 ராணுவ வீரர்கள் சீன-இந்திய எல்லை மோதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.