மலேசியா: Top Glove நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கும் விடுதிகள் முடக்கப்படும்
மலேசிய அரசாங்கம், Top Glove ரப்பர் கையுறை தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர் தங்கும் விடுதிகளை முடக்கவுள்ளது.
மலேசிய அரசாங்கம், Top Glove ரப்பர் கையுறை தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர் தங்கும் விடுதிகளை முடக்கவுள்ளது.
அந்த விடுதிகளில் COVID-19 நோய்ச் சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ள நிலையில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Top Glove நிறுவனத்தின் ஊழியர் தங்கும் விடுதிகளில் இன்று தொடங்கவுள்ள கட்டுப்பாடுகள், இம்மாத இறுதிவரை நீடிக்கும்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு (Kuala Lumpur)உக்கு மேற்கில் உள்ள கிள்ளான் (Klang), சிலாங்கூர் (Selangor) பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகள் முடக்கப்படவுள்ளன.
அங்கு சுமார் 13,000 ஊழியர்கள் வசிக்கின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன் அவர்களில் 17 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
தற்போது அந்த விடுதிகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 215க்கு உயர்ந்துள்ளது.
Top Glove ரப்பர் கையுறை தயாரிப்பு நிறுவனத்தில் 21,000க்கும் கூடுதலான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
நிறுவனத்தின் சுமார் 750 தொழிற்சாலைகளில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 90 பில்லியன் கையுறைகள் தயாரிக்கப்படுகின்றன.