Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பொம்மை விற்பவரின் பிள்ளை, சிறுவனைக் கட்டியணைக்கும் காணொளி - இதயம் உருகிய இணையவாசிகள்

பிள்ளைகள் கள்ளங் கபடமற்றவர்கள் என்பதைக் காட்டும் காணொளி இணையவாசிகளிடையே பரவி வருகிறது.

வாசிப்புநேரம் -
பொம்மை விற்பவரின் பிள்ளை, சிறுவனைக் கட்டியணைக்கும் காணொளி - இதயம் உருகிய இணையவாசிகள்

(படம்: Instagram/kiansh_ayansh)

பிள்ளைகள் கள்ளங் கபடமற்றவர்கள் என்பதைக் காட்டும் காணொளி இணையவாசிகளிடையே பரவி வருகிறது.

பிள்ளைகளின் மனது தூய்மையானது; அவர்களுக்கு அன்பு ஒன்றே மொழி.

அன்பையும், புன்னகையையும் மட்டுமே பொதுவாகக் கொண்ட இரு சின்னஞ்சிறு பிள்ளைகளின் அந்தச் செயல், சிறியதாக இருந்தாலும், அதில் இருக்கும் உணர்வு பலரையும் நெகிழச் செய்திருக்கிறது.

காணொளியில் கியான்ஷ் எனும் சிறுவன், பொம்மை விற்பவரின் மகனுக்கு முன்னால் நடனமாடுகிறான். அவன் பதிலுக்கு கியான்ஷைப் போலவே நடனமாடி அவனைக் கட்டியணைத்துக்கொள்கிறான்.

இந்தியாவில் நடந்த இது காணொளியாக எடுக்கப்பட்டது.

இரண்டு பிள்ளைகளும் தங்களை கட்டியணைத்துக் கொஞ்சிக்கொள்ளும் காட்சி காண்பவர்களுக்குப் பரவசத்தை உண்டாக்கும்.

அந்தக் காணொளி 35 மில்லியன் முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது, 4 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களின் அந்த அன்பு மழையில் நனைந்த இணையவாசிகள் பிள்ளைகளைப் பாராட்டினர்.

சிலர் பெற்றோருக்கும் நன்றிகளைக் கூறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்