ஜொகூர், துவாஸ் பாலங்களில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க 28 மில்லியன் வெள்ளியை முதலிடவிருக்கிறது மலேசியா
ஜொகூர், துவாஸ் பாலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க 28 மில்லியன் வெள்ளியை மலேசியா முதலீடு செய்யவிருப்பதாக மலேசிய நிதியமைச்சர் லிம் குவான் இங் (Lim Guan Eng) தெரிவித்துள்ளார்.
ஜொகூர், துவாஸ் பாலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க 28 மில்லியன் வெள்ளியை மலேசியா முதலீடு செய்யவிருப்பதாக மலேசிய நிதியமைச்சர் லிம் குவான் இங் (Lim Guan Eng) தெரிவித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டபோது, திரு. லிம் அதனைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 300,000 மலேசியர்கள் ஜொகூர் பாலத்தைக் கடந்து சிங்கப்பூருக்கு வருகின்றனர்.
அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.
அதன்பகுதியாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு கூடுதலாக 50 சேவை முகப்புகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார் திரு. லிம்.
அதோடு, சிங்கப்பூர் - ஜொகூர் பாரு விரைவு ரயில் பாதைத் திட்டத்தை தொடர மலேசியாவிற்கு எண்ணமுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, மலேசியாவின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த மாதம் 30ஆம் தேதிவரை கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க இணக்கம் காணப்பட்டது. பின்னர் அந்தக் கெடு, இம்மாதக் கடைசி வரை நீட்டிக்கப்பட்து.
அதற்கு ஈடாக, மலேசியா சிங்கப்பூருக்கு சுமார் 600,000 வெள்ளி செலுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.