தானியக்க முறையில் செயல்படும் டுவிட்டர் கணக்குகள்- முடக்கியிருக்கும் மலேசியா
தானியக்க முறையில் செயல்படும் டுவிட்டர் கணக்குகளை முடக்கியிருக்கும் மலேசியா
மலேசியத் தேர்தலுக்குச் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், "bot" எனப்படும் தானியக்க முறையில் செயல்படும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மலேசிய அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்லாயிரக் கணக்கான பதிவுகளை அவை தாங்கியிருந்தன.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும், அமெரிக்காவின் மின்னிலக்க ஊடக ஆய்வு நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் அது தெரியவந்தது.
தீய நோக்கம் கொண்ட தகவல்களைத் தாங்கிய சுமார் 500 கணக்குகள் முடக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.