பிலிப்பீன்ஸ்: கமூரி சூறாவளியால் மாண்டோரின் எண்ணிக்கை 13க்கு உயர்வு
மணிலா: பிலிப்பீன்ஸில் கமூரி சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 13க்கு உயர்ந்துள்ளது. பிலிப்பீன்ஸின் வடக்குப் பகுதியைப் பதம் பார்த்த சூறாவளி வீடுகளைத் தரைமட்டமாக்கியது.
மணிலா: பிலிப்பீன்ஸில் கமூரி சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 13க்கு உயர்ந்துள்ளது. பிலிப்பீன்ஸின் வடக்குப் பகுதியைப் பதம் பார்த்த சூறாவளி வீடுகளைத் தரைமட்டமாக்கியது.
புயல்காற்று மரங்களை வேரோடு சாய்த்தது. மணிலாவின் அனைத்துலக விமான நிலையம் 12 மணி நேரத்திற்கு மூடப்பட்டது.
ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார். மேலும் மூவர் மரங்களால் அல்லது பறக்கும் பொருள்களால் அடிபட்டு மாண்டதாக பிலிப்பீன்ஸ் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாண்டோரின் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.