COVID-19: வியட்நாமின் டானாங் நகரிலிருந்து சுமார் 800,000 பேர் வெளியேறினர்
COVID-19: வியட்நாமின் டானாங் நகரிலிருந்து சுமார் 800,000 பேர் வெளியேறினர்
வியட்நாமில் தற்போது COVID-19 நோய்த்தொற்றின் மையப்பகுதியாக டானாங் நகர் உருவெடுத்துள்ளது.
அந்தப் பகுதியிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 800,000 பேர் வியட்நாமின் மற்ற பகுதிகளுக்குச் சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் டானாங் நகரில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் சமூக அளவிலான முதல் நோய்ப்பரவல் சம்பவம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கு புதிதாக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது.
வியட்நாமில் இதுவரை 558 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 பேர் மாண்டனர்.