வியட்நாமின் டானாங் நகரில் தொடரும் கிருமித்தொற்றுப் பாதிப்பு
வியட்நாமின் டானாங் நகரில் தொடரும் கிருமித்தொற்றுப் பாதிப்பு
வியட்நாமின் டானாங் (Danang) நகரில் மேலும் 12 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாய் அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அங்கு மீண்டும் கிருமிப்பரவல் தலைதூக்கியதைத் தொடர்ந்து, இதுவரை 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 2-இலிருந்து 78 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்கள் டானாங் மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள் என்றும், அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
நேற்று கிருமித்தொற்றால் இருவர் மாண்டனர்.
பல மாதங்களாகக் கிருமிப்பரவலைக் கட்டுக்குள் வைத்திருந்த வியட்நாமில், மொத்தம் 558 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளன.