திருமணத்தின்போது தற்கொலைத் தாக்குதல்- 5 பேர் மரணம்
ஆஃப்கானிஸ்தானில் ஒரு திருமணத்தின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 5 பேர் மாண்டனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஆஃப்கானிஸ்தானில் ஒரு திருமணத்தின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 5 பேர் மாண்டனர்.
சம்பவம் நேற்று (ஜூலை 12) கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் பெச்சரகம் (Pacheragam) எனும் இடத்தில் நடந்தது.
அரசாங்கத்தை ஆதரிக்கும் ராணுவத் தளபதி ஒருவரின் வீட்டில் தாக்குதல் நடந்தது.
தாக்குதலில் குறைந்தது 40 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரு சிறுவன் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.