இந்தியாவில் பரவும் உருமாற்றம் கண்ட கிருமி வகை குறித்து உலகச் சுகாதார நிறுவனம் கவலை
இந்தியாவில் இருமுறை உருமாற்றம் கண்ட கிருமிவகை பரவுவது கவலையளிப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் இருமுறை உருமாற்றம் கண்ட கிருமிவகை பரவுவது கவலையளிப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள 2ஆம் கட்டக் கிருமிப்பரவலுக்கு அது காரணமாக இருக்கக்கூடுமென சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்பக் கிருமிகள் உருமாறுவது இயல்பு.
இந்தியாவில் இரண்டு முறை உருமாறிய கிருமி வகை, சென்ற ஆண்டு அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டதாய் நம்பப்படுவதாக நிபுணர் ஒருவர் கூறினார்.
அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கிருமி இன்னும் எளிதில் பரவும் தன்மையை வழங்கியிருக்கலாம் என்றார் அவர்.